பாஜகவின் தேர்தல் கூட்டணியை முறியடிக்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் - வேல்முருகன்.! - Seithipunal
Seithipunal


மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என மோடி மற்றும் அமித் ஷா கனவு காண்கின்றனர் என்றும் அந்த கனவு பலிக்காது என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

அம்பானி மற்றும் அதானி போன்ற முதலாளிகளுக்கு மட்டுமே பாஜக அரசு சலுகை செய்து தருவதாகவும் ஜிஎஸ்டி வரி உயர்வு, அத்தியாவசிய பொருள்களின் உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை மக்கள் மத்தியில் பெரும் பிரச்சினையாக இருக்கிறது என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்

2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் பணிகளை பாஜக தொடங்கி விட்டது என்றும் மோடி, அமித்ஷா ஆகிய இருவரும் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள் என்றும் ஆனால் அந்த கனவு எந்தவிதத்திலும் பலிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

பாஜகவின் தேர்தல் கூட்டணியை முறியடிக்க நாடெங்கிலும் முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TVK leader velmurugan speech about Parliament election BJP


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->