தஞ்சையில் கைது செய்யப்பட்ட அமமுக நிர்வாகி! கொந்தளிக்கும் தினகரன்! பின்னணி என்ன?
TTV Dhinakaran Condemns to Police for arrest of AMMK administrators
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுரேஷ்குமார் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
இவரின் கைதுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டரில், "தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு.K.சுரேஷ்குமார் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்திருப்பது கண்டனத்துக்குரியது. கழகத்தினர் மீதான இது போன்ற பழி வாங்கும் செயல்களை வேடிக்கை பார்த்துகொண்டிருக்க முடியாது.
தொடர்ந்து கழக நிர்வாகிகளை அச்சுறுத்தும் வகையில் இத்தகைய தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆட்சியாளர்களும், அவர்களுக்குத் துணைபோகும் காவல்துறையினரும் இதற்கு சட்டப்படியான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறேன்" என தினகரன் பதிவிட்டுள்ளார்.
நேற்று தஞ்சை மாவட்டத்தில், அண்மையில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு நெருக்கமானவர்கள் என அறியப்படக்கூடிய சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் சுரேஷ்குமார் ஒருவர் என்ற மற்றொரு செய்தியும் வெளியாகியிருக்கிறது.
English Summary
TTV Dhinakaran Condemns to Police for arrest of AMMK administrators