ஆட்சிக்கு முன்பே அராஜகம்.. அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினர்.! தினகரன் கண்டனம்.!
TTV dhinakaran angry with dmk volunteers
இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ தீயாக பரவி வருகின்றது. அதில், திமுகவினர் சென்னை முகப்பேரில் இருக்கும் அம்மா உணவகத்தை வெறித்தனமாக சூறையாடும் காட்சி அமைந்துள்ளது. இது தற்போது கண்டனங்களை பெற்று வருகின்றது.
இந்த நிலையில், தற்போது இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன், "சென்னை முகப்பேரிலுள்ள அம்மா உணவகத்தை தி.மு.க.வினர் அடித்து நொறுக்கி சூறையாடியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயர் இருக்கிறது என்பதற்காகவே ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் உணவகத்தில் தி.மு.க.வினர் இப்படி நடந்துகொள்வது வேதனையளிக்கிறது.
ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை ஆரம்பித்துவிட்ட தி.மு.க.வினர் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறார்களோ? என்கிற கவலை இந்தக் காணொளியைக் காணும்போது ஏற்படுகிறது.
தி.மு.க.வினர் ஒருபோதும் திருந்தவே மாட்டார்கள் என்பதற்குச் சாட்சியாக இந்த சம்பவம் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களை கடவுள்தான் காப்பற்ற வேண்டும். "என்று தெரிவித்துள்ளார்.
English Summary
TTV dhinakaran angry with dmk volunteers