சசிகலா தொடர்ந்த வழக்கு.. இன்று நடக்கப்போகும் மாற்றம்.. கலக்கத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்.! - Seithipunal
Seithipunal


ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு கட்சியில் ஏற்பட்ட குழப்பங்களால் அதிமுக கட்சியின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது. பின்னர் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு தினகரன் தலைமையிலும், ஓபிஎஸ் தலைமையிலும் அணிகள் செயல்பட்டன.

அப்போது திடிரென தினகரன் அணியில் இருந்து பிரிந்த இபிஎஸ் அணியினர் ஓபிஎஸ் அணியினருடன் இணைந்தனர். இரட்டை இலை சின்னத்தைப் பெற தினகரன் தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் ஆவணங்கள் தாக்கல் செய்தன. பின்னர் ஓபிஎஸ், மதுசூதனன் தலைமையிலான அணிக்கு கட்சியும், சின்னத்தையும் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன், சசிகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி சசிகலா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today today sasikala case investigate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->