தனது பிறந்தநாளில் ஏழை-எளிய மக்களுக்காக புதிய திட்டத்தை தொடங்கும் ரஜினிகாந்த்.!! - Seithipunal
Seithipunal


நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

ரஜினி ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடுகள் செய்துள்ளனர். மேலும், சமூக வலைத்தளங்களில் ரஜினி பிறந்த நாளுக்காக #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், தனது 72-வது பிறந்த நாளில் அனைவரும் வியக்கும் வகையில் ஒரு நல்ல திட்டத்தை ரஜினிகாந்த் தொடங்க உள்ளார். 

அதாவது, ஏழை - எளிய குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளார். இதற்காக Rajinikanth Foundations என்ற பயிற்சி அமைப்பை ரஜினிகாந்த் தொடங்க உள்ளார். இத்திட்டம் வழக்கறிஞர் எம் சத்திய குமாரால் நிர்வகிக்கப்படும் என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today rajinikanth birthday new palan launch


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->