ஓ பன்னீர் செல்வத்தின் இறுதி அஸ்திரம்.. பரபரப்பில் அதிமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டுமென ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழுவை நடத்தலாம் என உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்று முடிந்தது. அந்த பொதுக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இதைத்தொடர்ந்து, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 15ஆம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஓபிஎஸ் தரப்பில் மனுவை விசாரித்தால் தங்கள் தரப்பு நியாயத்தை கேட்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே ஓ பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தின் மேல் முறையீடு செய்யப்பட்ட மனுவை கடந்த 18-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பிறகு நீதிபதி, ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. இந்த வழக்கு யாருக்கு சாதகமாக அமையப்போகிறது என இரு தரப்பினரும் பரபரப்பில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today ops case in supreme court


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->