ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சென்னை கலைவாணர் அரங்கில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்திலேயே தமிழக சட்டப்பேரவை கூடும்போது ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு முதல் சட்டபேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். 

இன்று காலை 9.55 மணிக்கு கலைவாணர் அரங்கிற்கு வரும் ஆளுநரை சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்று அரங்கிற்கு அழைத்து வருவார்கள். பின்னர் சபாநாயகர் இருக்கையில் ஆளுநர் அமர்வார். அவருக்கு வலது புறம் உள்ள இருக்கையில் சபாநாயகர் அப்பாவும், இடதுபுறம் உள்ள இருக்கையில் ஆளுநரின் செயலாளர் அமருவார்கள். காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது. 2022-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கவுள்ள நிலையில் காலை 9.15 மணியளவில் அதிமுக ஆலோசனை நடத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today admk mlas meeting in chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->