#BREAKING || தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்.. சற்றுமுன் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியாக உள்ளதாக, அமைச்சர் மூர்த்தி பேட்டி அளித்துள்ளார்.

கொரோனா தோய்த்தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடக்க வாய்ப்புள்ளது.

மேலும், கொரோனா தோய்த்தொற்று பரவலை தடுக்கக்கூடிய வழிகாட்டு நெறிமுறைகள் உடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சற்று முன்பு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி தெரிவிக்கையில்,

"ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று வெளியிடுவார். பாதுகாப்பு விதிகளை பின்பற்றி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும்" என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்படலாம் என்ற ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn jallikattu 2022


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->