#BigBreaking : தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய அறிவிப்பு.! சற்றுமுன் அமைச்சரவை ஒப்புதல்.!
tn govt announce new reservation for govt school student
#BigBreaking : தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மிகப்பெரிய அறிவிப்பு.! சற்றுமுன் அமைச்சரவை ஒப்புதல்.!
தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போனது. இதனையடுத்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கு உண்டான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த ஆட்சி காலத்தில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி கே பழனிசாமி ஒரு அதிரடி சட்டத்தை இயற்றினார். அதன்படி, அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசாணை பிறப்பித்து சட்டம் இயற்றினார். இந்த சட்டம் காரணமாக கடந்த 2020 -21 கல்வி ஆண்டில் தமிழக அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சுமார் 400க்கும் மேற்பட்டோர் மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்.
இந்த நிலையில், தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
தமிழகத்தில் பணம் படைத்தவர்கள் தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதும், பணம் இல்லாத ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசு பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பது வழக்கமான ஒன்று.
இந்த நிலையில், ஏழை மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இதன் மூலம் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அனைத்து தரப்பு மக்களும் முன்வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
English Summary
tn govt announce new reservation for govt school student