ராமன் - சீதையை நேரில் கண்ட தமிழக முதல்வர்.!  - Seithipunal
Seithipunal


நாகை அருகே அனந்தமங்கலம் கிராமத்திலுள்ள ஸ்ரீராஜகோபால பெருமாள் திருக்கோயிலில் 1978ம் ஆண்டு களவுபோன புராதான சிலைகள் இராமர், சீதை இலட்சுமணன் சிலைகளை கண்டெடுக்க கடும்முயற்சி மேற்கொண்டு மீட்டெடுத்த தமிழக காவல்துறையின் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு, தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாகை  மாவட்டம், அனந்தமங்கலம் கிராமத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீராஜகோபால பெருமாள் திருக்கோயிலில் 1978ம் ஆண்டு களவுபோன புராதான சிலைகள் இராமர், சீதை, இலட்சுமணன் சிலைகளை காணாமல் போனது.

இந்த சிலைகள் அனைத்தும், லண்டனில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருப்பதை அறிந்த, தமிழக காவல்துறையின் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதனை தமிழகத்துக்கு மீட்டு வந்தனர்.

இந்நிலையில், இராமர், சீதை இலட்சுமணன் சிலைகளை தமிழக முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டு, காவல்துறையினருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், 

"நாகை  மாவட்டம் - அனந்தமங்கலம் கிராமத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீராஜகோபால பெருமாள் திருக்கோயிலில் 1978ம் ஆண்டு களவுபோன புராதான சிலைகள் இராமர், சீதை(ம) இலட்சுமணன் சிலைகளை கண்டெடுக்க கடும்முயற்சி மேற்கொண்டு மீட்டெடுத்த தமிழக காவல்துறையின் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு எனது பாராட்டுகள்." என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM WISH TO TN POLICE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->