#BREAKING: நாடக காதல், புல்லிங்கோ-க்களுக்கு ஆப்பு! தமிழக முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
TN CM ANNOUNCE FOR EVE TEASING
மூன்று நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் நேற்று இரண்டாவது நாள் கூட்டத்தொடரில் நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய விவரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பின. எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின், "திமுக என்றும் நீட் விவகாரத்தில் எதிராகத்தான் உள்ளது. கலைஞர் ஆட்சியின் போது நீட்தேர்வு நடைபெறவில்லை. நீட் தேர்வு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும்" என்று மு க ஸ்டாலின் பேசியுள்ளார்.
இந்நிலையில், மூன்று நாள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று இறுதி நாள் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவித்து வருகிறார், அதில், வரதட்சணை கொடுமைக்கு அதிகபட்ச தண்டனையாக 7 வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டு இருந்ததை, 10 வருடங்களாக உயர்த்தி தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும், பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பாலியல் தொழிலுக்காக பெண்களை விற்பது, வாங்குவது தொடர்பான குற்றத்திற்கு அதிகபட்ச ஆயுள் தண்டனை வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். பெண்களை பின்தொடரும் குற்றத்திற்கு 5 ஆண்டில் இருந்து 7 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது." என
முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
English Summary
TN CM ANNOUNCE FOR EVE TEASING