#BREAKING: தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கப்பட்ட நிலையில்., சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தமிழக சட்டப்பேரவையில் 11வது முறையாக  நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்து உள்ளார்.

சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் முக்கிய அறிவிப்புகளில், தமிழக கூட்டுறவு வங்கிகளில் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பெற்றிருந்த பயிர் கடன் 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடிக்கான நிதி 5000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்குவது உள்ளிட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பல்வேறு அறிவிப்புகளுக்கு இந்த பட்ஜெட்டில் இடைக்கால பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்றைய இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உள்ளார். நாளை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாள் என்பதால், நாளை சட்டசபை கூடாது. அதற்கு அடுத்த 3 நாட்களுக்கு (25,26, 27) சட்டசபை நடைபெறும் என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் தாக்கல் மீதான விவாதம் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் 25 ஆம் தேதி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Assembly 3 days


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->