நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர்.! சோகத்தில் தொண்டர்கள்!
tk sivakumar admitted in hospital
கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.சிவக்குமார் நெஞ்சுவலி காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டி.கே.சிவக்குமாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த மாதம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
டி.கே.சிவக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்திகேட்டு அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை அருகே குவிந்து வருகின்றனர்.
English Summary
tk sivakumar admitted in hospital