தமிழ் தேசிய அரசியலை கையில் எடுக்கும் திருமாவளவன்! தனித் தமிழ்நாடு அமைப்பதை இலக்கு! - Seithipunal
Seithipunal


சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஜெ.பிரதாப் என்பவர் எழுதியுள்ள திருமாவின் சிந்தனை கோட்பாடுகள் எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் "அரசியல் என்பது பதவிக்காக அதிகாரத்திற்காக பொருள் ஈட்டுவதற்கான வாய்ப்பு என்ற உணர்வு இங்கே கட்டமைக்கப்பட்டுள்ளது. 

அனைத்து கட்சிகளிலும் கொள்கை கோட்பாடுகள் குறித்து ஆர்வம் காட்டி விவாதிப்பவர்கள் மிகக் குறைந்த நபர்களே உள்ளனர். ஆனால் அதுபோன்ற நபர்கள் தான் கட்சிகளில் முக்கிய பொறுப்புகளை பெற்று வழிநடத்துவார்கள். அடங்கமறுப்போம், அத்துமீறுவோம், திருப்பி அடிப்போம் என்பது கொள்கையா? கோட்பாடா? இது செயல் திட்டம். சாதி, முதலாளித்துவம், நிலபிரபுத்துவம், குடும்பம் என இவை எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஒடுக்கப்படுகிற மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் கொள்கை நூலகம் தான் அடங்க மறுத்தல் அத்துமீறுதல் திருப்பி அடித்தல். 

இது போன்ற முழக்கங்கள் வன்முறை முழக்கங்கள் அல்ல வன்முறைக்கு எதிரான முழக்கம். விடுதலைக்கான முழக்கம், உலகின் ஒடுக்கு முறைக்கு உள்ளான அனைவருக்கான முழக்கம். தமிழ்நாடு எனும் தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி வழி தேசியம் வளர்த்தெடுக்கப்பட்டு அதன் ஒன்றியமாகத்தான் மத்திய அரசு இருக்க வேண்டும். மாநிலங்களின் ஒன்றியம் என்பதைவிட தேசிய இனங்களின் ஒன்றியமாக இருக்க வேண்டும்" என திருமாவளவன் பேசியுள்ளார். திருமாவளவனின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirumavalavan speak about Tamil nationalism


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->