கரூரில் உயிரிழந்த 39 பேரின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது..! - Seithipunal
Seithipunal


கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதியன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் மற்றும் நடிகர் விஜய் அவர்களின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதில் சிக்கி 41 பேர் பலியாகியுள்ளதோடு, 100 பேர் வரை காயமடைந்து சிசிக்கை பெற்று வீடு திரும்பியுள்ளனர். நாட்டை உலுக்கிய இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரில், 39 குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட தலா ரூ. 20 லட்சம் நிவாரணத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை (RTGS) மூலம் செலுத்தப்பட்டு வரவு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறந்தவர்களின் 39 குடும்பத்தினருக்காக மொத்தம் ரூ. 7.8 கோடி செலவிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள 02 பேரின் குடும்பத்தினரில் யாருக்கு தொகை வழங்குவது என்பதில் சிக்கல் உள்ளதால் இன்னும் செலுத்தப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Tevag has transferred Rs 20 lakh as compensation to the bank accounts of the families of the 39 people who died in the Karur stampede


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->