தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்; காவல் அதிகாரிகள், ஆட்சியர்கள் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு..!
The Election Commission has issued orders transferring police officials and District Collectors in view of the Tamil Nadu Assembly elections
தமிழ்நாடு சட்டமன்றதேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலையொட்டி காவல் அதிகாரிகள், ஆட்சியர்கள் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக சந்தீப் ராய் ரதோரை நியமிக்க தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் மற்றும் மாற்றம் செய்த அதிகாரிகள் பணியில் சேருவது தொடர்பான இணக்க அறிக்கை 03.04.2026 அன்று காலை 11:00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் தயார்நிலையை ஆணையம் மாற்றம் செய்துள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், தேர்தல்கள் முடிவடையும் வரை தேர்தல் தொடர்பான எந்தப் பதவிகளிலும் நியமிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை காவல் ஆணையர் லோகநாதன் மாற்றப்பட்டு அப்பதவிக்கு அபிஷேக் தீக்ஷித் நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் ஆணையர் அமல்ராஜ் மாற்றப்பட்டு, சஞ்சய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு மண்டல காவல்துறை ஐஜியாக ரம்யா பாரதியை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு. சேலம் ஆட்சியராக அருண் தம்புராஜ், தூத்துக்குடி ஆட்சியராக விஷ்ணு மகாஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
The Election Commission has issued orders transferring police officials and District Collectors in view of the Tamil Nadu Assembly elections