முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி மனு! நாளை விசாரணை! - Seithipunal
Seithipunal


பட்டியல் இன் மக்களுக்கு கொடுக்கப்பட்டது போல, பிராமணர்களுக்கும் தனி வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று, இந்து மக்கள் கட்சி சார்பில் அண்மையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது. 

இது குறித்து தெலுங்கு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையம் காவல் நிலையங்களில் நடிகை கஸ்தூரிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. 

இந்த புகாரின் பேரில் நடிகை கஸ்தூரி மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குறிப்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் நடிகை கஸ்தூரி வீட்டுக்கு சம்மன் அனுப்ப சென்றபோது, நடிகை கஸ்தூரி அந்த வீட்டில் இல்லை என்றும், அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார்  தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நடிகை கஸ்தூரி தலைமறைவாகி விட்டதாகவும், அவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகின.

இந்நிலையில், இந்த விவாகரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகை கஸ்தூரி தனக்கு முன்ஜாமீன் கோரியுள்ளார்.

கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை நாளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை செய்ய உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Telugu People Case Actress Kasthuri Bail Apply


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->