தமிழிசை தேர்தலில் போட்டியிட ஆளுநர் பதவி ராஜினாமா?!
Tamilisai response resign governor post for contest in election question
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் மகளான தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த நிலையில் அவர் கடந்த 2006, 2011ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலிலும் 2009, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலிலும் போட்டியிட்டுள்ளார்.
ஆனால் அவரால் ஒரு முறை கூட வெற்றி பெற முடியவில்லை இருப்பினும் தமிழகத்தில் பாஜக வளர்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற முழக்கத்தை முதன் முதலில் முன்னெடுத்து தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சியாக மாற்றியவர் தமிழிசை சவுந்தரராஜன்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அவர் 21% வாக்குகளை மட்டுமே பெற்று 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தல் அரசியலில் ஈடுபட உள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் "நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யப்போகிறீர்களா? எனக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தமிழிசை ''அப்படி யார் சொன்னார்களோ அவர்களிடமே போய் கேளுங்கள்" என பதிலளித்துள்ளார். இதன் மூலம் அவர் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் போட்டியிட மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
English Summary
Tamilisai response resign governor post for contest in election question