சிவகங்கை: முகநூலில் மூழ்கிய சிறுமியை, காதல் வலையில் வீழ்த்தி குடும்பம் நடத்திய காதலன்.!  - Seithipunal
Seithipunal


ஆன்லைனில் பாடம் பயில்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு, முகநூலில் சுற்றி வந்த சிறுமி ஒருவரை காதல் வலையில் விழுத்தி திருமணம் செய்த காதலனை, போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தான் இதனை செய்துள்ளார். 15 வயதே ஆகும் இந்த சிறுமி, ஆன்லைன் மூலம் பள்ளி பாடங்களை கற்று வந்துள்ளார்.

இதற்காக அவரின் பெற்றோர்கள் ஸ்மார்ட்போன் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளனர். அந்த பள்ளி மாணவி ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனிக்காமல், முகநூலில் சுற்றித்திரிந்து உள்ளார்.

அப்போது கார்த்திகேயன் என்ற நபர் அவருக்கு அறிமுகமாக, அந்த பள்ளி மாணவியை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார் கார்த்திகேயன். 

இந்த நிலையில், கடந்த மாதம் 30ஆம் தேதி தனது பெற்றோர்களிடம் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற பள்ளி மாணவி திரும்பி வீட்டுக்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பள்ளி மாணவியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளி மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில், அந்த பள்ளி மாணவி திருப்பூரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக திருப்பூர் சென்ற போலீசார், பள்ளி மாணவியை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த மாணவி அதிர்ச்சிகரமான ஒரு தகவலை தெரிவித்தார். முகநூல் மூலமாக என்னிடம் ஆசை வார்த்தை கூறி, கார்த்திகேயன் தன்னை திருமணம் செய்து கொண்டதாக அந்த சிறுமி தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, இருவரையும் காரைக்குடி அழைத்து வந்த போலீசார், கார்த்திகேயனை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivagangai school girl love marriage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->