கன்னட மக்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. முன்னாள் முதல்வர் சித்தராமையா பேட்டி.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா சட்டமன்ற பொது தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கர்நாடக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 306 அறைகளில் 4,256 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் என்னும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் 120 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளுங்கட்சியான பாஜக 82 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதனை காங்கிரஸ் நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தேர்தல் குறித்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா பேட்டி அளித்துள்ளார்.

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் குறித்து பேசிய அவர் கன்னட மக்கள் பாஜகவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பிரதமர் மோடி, அமித்ஷா எத்தனை முறை கர்நாடகத்திற்கு பிரச்சாரத்துக்கு வந்தாலும் அவர்களை கர்நாடக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பாஜக அரசின் ஊழலால் மக்கள் விரக்தியில் உள்ளனர். அதன் அடிப்படையிலேயே தேர்தல் முடிவுகள் வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Siddaramaiyaa speech about Karnataka assembly election results


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->