பிரதமர் மோடியின் வெட்கக்கேடான முறை! - சசி தரூர் முகத்திரையை கிழித்த காங்கிரஸ்
Shameful approach of Prime Minister Modi Congress rips off Shashi Tharoors veil
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், 'ஆப்ரேஷன் சிந்தூர்' பற்றி விளக்கம் கொடுக்க அயல்நாட்டு பயணத்தில் உள்ளார். அவர் செல்லும் இடமெல்லாம் மோடிக்கு புகழாரம் சூட்டுவது காங்கிரசை முகம் கோண வைத்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா, 'தி பாரடாக்ஸிகல் பிரைம் மினிஸ்டர்' புத்தகத்தில் மோடியை விமர்சித்து தரூர் அவர்கள் எழுதிய பகுதியை பகிர்ந்துள்ளார்.
எம்.பி. சசி தரூர்:
அதில் தரூர் அவர்கள் குறிப்பிட்டதாவது, "2016 ஆம் ஆண்டு சர்ஜிக்கல் தாக்குதல்கள் மற்றும் மியான்மரில் கிளர்ச்சியாளர்களைத் துரத்துவதற்கான இராணுவ நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி தனது கட்சிக்கான தேர்தல் பிரச்சார கருவியாக வெட்கக்கேடான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் கடந்த காலங்களில் நடந்திருந்தாலும், இது காங்கிரஸ் ஒருபோதும் செய்யாத ஒன்று" என்று சசி தரூர் எழுதியுள்ளார்.இது தற்போது சர்ச்சையை கிளப்பி வருகிறது.
English Summary
Shameful approach of Prime Minister Modi Congress rips off Shashi Tharoors veil