#BREAKING || செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு தாக்கல்! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தநிலையில் தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மனுத்தாக்கல் செய்ய அனுமதி வழங்குமாறு சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு முறையிடப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பின் முறையீட்டை ஏற்றுக் கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி ஜாமீன் மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார். அதன் அடிப்படையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கூடிய விரைவில் பட்டியலிடப்பட்டு விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SenthilBalaji filed bail petition in Chennai principal session court


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->