#BigBreaking || செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி.!!
Senthilbalaji bail petition disposed again
பணமோசடி வழக்கில் கைதாகி நீண்ட காலமாக சிறையில் உள்ள தனக்கு ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். 3 மாதங்களில் சிறப்பு நீதிமன்றம் விசாரணையை முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க கோரி இரண்டாவது முறையாக சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணை நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் ஜாமீன் வழங்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்வதாகவும் அமலாக்கத்துறை இன்று தேதியிட்டு அடுத்த மூன்று மாதங்களுக்குள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டும் என அமலாக்கத்துறைக்கு மற்றும் வழக்கை முடிக்க உன்னை முதன்மை நீதிமன்றத்திற்கும் உத்தரவிட்டு ஜாமின் வழக்கினை முடித்து வைத்துள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
English Summary
Senthilbalaji bail petition disposed again