அடிக்கடி தமிழகத்திற்கு வருவது பரிதாபமாக இருக்கிறது - பிரதமரை கலாய்த்த செல்வப்பெருந்தகை.! - Seithipunal
Seithipunal


கோயம்பத்தூர், செட்டிபாளையம் பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் வருகின்ற ஏப்ரல் 12ஆம் தேதி பிரசார கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். 

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

அப்போது, கோவையில் மிக பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. வருகின்ற 12ஆம் தேதி நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு மேல் அமரும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்த கூட்டத்திற்கு பிறகு தமிழக மட்டுமல்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும். பிரதமர் தெரு தெருவாக சென்று வாக்கு சேகரிக்க போகிறார். 

எங்களது தலைவர்கள் எல்லாம் மக்களை எப்படி சந்திக்க வேண்டுமோ அப்படி சந்திக்கிறார்கள். பிரதமர் பேராசையில் நாட்டில் ஏதாவது சாதித்து விடலாம் தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என நினைக்கின்றார். 

தமிழக மக்களுக்கு இவரது உண்மை முகம் தெரியும். மீண்டும் தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே கிடையாது. ஆனால் தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி வருவது தான் பரிதாபமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Selvaperunthagai disturbed PM


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->