தவெகவிற்கு எதிராக திமுக திட்டம்; அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக களமிறங்கும் சீமான்..? - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில், நாம் தமிழர் கட்​சி தனித்து போட்டியிட்ட நிலையில், அனைத்து இடங்​களி​லும் தோல்​வியைச் சந்​தித்​தது. இதனால் அதன் வாக்கு வங்​கி​யும் 08 சதவீதத்​திலிருந்து 04 சதவீத​மாகக் குறைந்​தது. காரைக்​குடி​யில் போட்​டி​யிட்ட அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானும் டெபாசிட் இழந்து 04- ஆம் இடத்​துக்கு தள்​ளப்​பட்​டார்.

இந்நிலையில், தவெக கட்சியின் தலைவர் விஜய் இரு தொகு​தி​களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தமிழத்தில் தவெக வெற்றிப்பெற்று ஆட்சியை பிடித்த நிலையில் விஜய்  முதல்வராகியுள்ளார்.

இதனையடுத்து அவர், திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளார். இதனால் திருச்சி கிழக்​கு தொகுதியை தொடர்ந்து, பெருந்​துறை, தாராபுரம், மது​ராந்​தகம், அம்​பாச​முத்​திரம், விராலிமலை ஆகிய 06 தொகு​தி​களுக்கு தற்​போது இடைத்​தேர்​தல் நடைபெறவுள்ளது. 

இந்த இடைத்​தேர்​தலில் தவெக கூட்​ட​ணியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்​பில் திமுக தீவிரமாகி முயற்சித்து வருகிறது.  கேப்போன்று ஆளும் தவெகவிற்கு எதி​ராக அனைத்து எதிர்க்​கட்​சிகளை​யும் ஒன்​றிணைத்து பொது வேட்​பாளர்​களை நிறுத்த ஆலோ​சித்து வரு​கிறது.

இதன் முதல்​கட்​ட​மாக நெல்லை மாவட்​டத்​தின் அம்​பாச​முத்​திரம் தொகு​தி​யில் தீவிர பணி​களை தொடங்​கி​யுள்​ளது. கடந்த தேர்​தலில் அம்​பாச​முத்​திரத்​தில் அதி​முக சார்​பில் வென்ற இசக்கி சுப்​பை​யா, இரண்​டாம் இடம் பிடித்த காங்​கிரஸ் வேட்​பாளர் மற்​றும் மூன்​றாம் இடம்​பிடித்த தவெக வேட்​பாளர் என மூவருமே தற்​போது தவெக அணி​யில் உள்​ளனர். 

இத்​தொகு​தி​யில் நாடார் சமூகத்​தினர் கணிச​மாக வசிப்​ப​தைக் கணக்​கில் கொண்​டு, அதே சமூகத்​தைச் சேர்ந்த சீமானை பொது​ வேட்​பாள​ராக நிறுத்த திமுக தற்போது காய் நகர்த்தி வரு​கிறது. சீமானை சம்​ம​திக்க வைக்​கும் பொறுப்பு முன்​னாள் அமைச்​சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், இது தொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யிட​மும் திரைமறைவு பேச்​சு​வார்த்​தைகள் நடந்து வரு​வ​தாக​வும் தகவல்​கள் வெளியாகியுள்ளன.

அதாவது, அம்​பாச​முத்​திரத்​தில் சீமானை வெற்றி பெறச்​செய்து சட்​டப்​பேர​வைக்​குள் அனுப்​பி​னால், அது முதல்​வர் விஜய்க்​கும், தவெக​வுக்​கும் சட்​டப்​பேர​வை​யில் கடுமை​யான அரசி​யல் நெருக்​கடியை கொடுக்க முடியும் மற்றும் சட்​டப்​பேர​வை​யில் எதிர்க்​கட்​சிகளின் குரல் மேலும் வலுப்​பெறும் என திமுக முடிவெடுத்துள்ளதாக கூறப்​படு​கிறது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி நிர்​வாகி​களிடம் பேசி​ய​போது, எங்​கள் தரப்​பில் யாரிட​மும் பேச்​சு​வார்த்தை எது​வும் இது​வரை நடத்​தப்​பட​வில்​லை. அடுத்த சில நாட்​களில் கட்​சி​யின் ஆலோ​சனை கூட்​டம் நடை​பெறவுள்​ளது. அதில் இதுபற்றி வி​வா​திக்​கப்​படலாம்​ எனத்​ தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman to contest as common candidate in Ambasamudram constituency


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?




Seithipunal
--> -->