தவெகவிற்கு எதிராக திமுக திட்டம்; அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக களமிறங்கும் சீமான்..? - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில், நாம் தமிழர் கட்​சி தனித்து போட்டியிட்ட நிலையில், அனைத்து இடங்​களி​லும் தோல்​வியைச் சந்​தித்​தது. இதனால் அதன் வாக்கு வங்​கி​யும் 08 சதவீதத்​திலிருந்து 04 சதவீத​மாகக் குறைந்​தது. காரைக்​குடி​யில் போட்​டி​யிட்ட அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானும் டெபாசிட் இழந்து 04- ஆம் இடத்​துக்கு தள்​ளப்​பட்​டார்.

இந்நிலையில், தவெக கட்சியின் தலைவர் விஜய் இரு தொகு​தி​களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தமிழத்தில் தவெக வெற்றிப்பெற்று ஆட்சியை பிடித்த நிலையில் விஜய்  முதல்வராகியுள்ளார்.

இதனையடுத்து அவர், திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜி​னாமா செய்​துள்​ளார். இதனால் திருச்சி கிழக்​கு தொகுதியை தொடர்ந்து, பெருந்​துறை, தாராபுரம், மது​ராந்​தகம், அம்​பாச​முத்​திரம், விராலிமலை ஆகிய 06 தொகு​தி​களுக்கு தற்​போது இடைத்​தேர்​தல் நடைபெறவுள்ளது. 

இந்த இடைத்​தேர்​தலில் தவெக கூட்​ட​ணியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்​பில் திமுக தீவிரமாகி முயற்சித்து வருகிறது.  கேப்போன்று ஆளும் தவெகவிற்கு எதி​ராக அனைத்து எதிர்க்​கட்​சிகளை​யும் ஒன்​றிணைத்து பொது வேட்​பாளர்​களை நிறுத்த ஆலோ​சித்து வரு​கிறது.

இதன் முதல்​கட்​ட​மாக நெல்லை மாவட்​டத்​தின் அம்​பாச​முத்​திரம் தொகு​தி​யில் தீவிர பணி​களை தொடங்​கி​யுள்​ளது. கடந்த தேர்​தலில் அம்​பாச​முத்​திரத்​தில் அதி​முக சார்​பில் வென்ற இசக்கி சுப்​பை​யா, இரண்​டாம் இடம் பிடித்த காங்​கிரஸ் வேட்​பாளர் மற்​றும் மூன்​றாம் இடம்​பிடித்த தவெக வேட்​பாளர் என மூவருமே தற்​போது தவெக அணி​யில் உள்​ளனர். 

இத்​தொகு​தி​யில் நாடார் சமூகத்​தினர் கணிச​மாக வசிப்​ப​தைக் கணக்​கில் கொண்​டு, அதே சமூகத்​தைச் சேர்ந்த சீமானை பொது​ வேட்​பாள​ராக நிறுத்த திமுக தற்போது காய் நகர்த்தி வரு​கிறது. சீமானை சம்​ம​திக்க வைக்​கும் பொறுப்பு முன்​னாள் அமைச்​சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், இது தொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யிட​மும் திரைமறைவு பேச்​சு​வார்த்​தைகள் நடந்து வரு​வ​தாக​வும் தகவல்​கள் வெளியாகியுள்ளன.

அதாவது, அம்​பாச​முத்​திரத்​தில் சீமானை வெற்றி பெறச்​செய்து சட்​டப்​பேர​வைக்​குள் அனுப்​பி​னால், அது முதல்​வர் விஜய்க்​கும், தவெக​வுக்​கும் சட்​டப்​பேர​வை​யில் கடுமை​யான அரசி​யல் நெருக்​கடியை கொடுக்க முடியும் மற்றும் சட்​டப்​பேர​வை​யில் எதிர்க்​கட்​சிகளின் குரல் மேலும் வலுப்​பெறும் என திமுக முடிவெடுத்துள்ளதாக கூறப்​படு​கிறது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி நிர்​வாகி​களிடம் பேசி​ய​போது, எங்​கள் தரப்​பில் யாரிட​மும் பேச்​சு​வார்த்தை எது​வும் இது​வரை நடத்​தப்​பட​வில்​லை. அடுத்த சில நாட்​களில் கட்​சி​யின் ஆலோ​சனை கூட்​டம் நடை​பெறவுள்​ளது. அதில் இதுபற்றி வி​வா​திக்​கப்​படலாம்​ எனத்​ தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman to contest as common candidate in Ambasamudram constituency


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->