பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்.. சசிகலா பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


சசிகலா தமிழகம் முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. இதனுடைய சசிகலா சேலம் நாமக்கல் மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப் பயணமாக காரில் சென்றார் நேற்று முன்தினம் காலையில் நாமக்கல் வந்த சசிகலா, அங்குள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

பின்னர், சசிகலா திருச்செங்கோடு, சங்ககிரி வழியாக சேலம் வந்தார். சேலம் ராஜகணபதி கோவிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு. அவர் சேலம் மாமாங்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கினார். நேற்று இரண்டாவது நாளாக மாமாங்கத்தில் இருந்து காரில் தாரமங்கலம் சென்றார். பின்னர் பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இதையடுத்து, அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கொங்கு மண்டல மக்கள் மிகவும் மென்மையானவர்கள். அவர்கள் அன்பாகவும், பாசமாகவும் பழகுகின்றனர். ஒருவர் அரசியலில் இருப்பதும், இல்லாமல் போவதும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் எடுக்கிற முடிவு. தனிப்பட்ட ஒருவர் இதனை கூறமுடியாது. தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் யாரை விரும்புகிறார்களோ அவர்கள் அரசியலில் இருந்து யாராலும் விரட்ட முடியாது. நான் சென்ற இடங்களிலெல்லாம் தொண்டர்கள் எழுச்சியை பார்க்க முடிகிறது. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மாற்றம் வரும் என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sasikala press meet about aiadmk


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->