சசிகலா போட்ட பிளானுக்கு தடை போட்ட தினகரன்!! அப்செட்டில் சசி!!
sasikala in admk
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனால் அமமுகவிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வேறுகட்சிகளில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா மற்றும் சிலர் அமமுகவிலிருந்து வெளியேறியது அரசியலில் தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இதனால் கட்சியை பலப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் தினகரனின் உத்தரவின் பேரில் அமமுகவிற்க்கு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. மேலும் அமமுகவை கட்சியாக பதிவு செய்த பின்னரே தேர்தலில் போட்டியிடுவது என்று தினகரன் தெரிவித்திருந்தார்.
தற்போது அமமுகவை கட்சியாக பதிவு செய்துவிட்டனர். இதனால் வரவிருக்கும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தினகரன் கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் அமமுகவில் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய நிர்வாகிகளை தினகரன் அறிவித்தார். இதனால் சசிகலா தரப்பு அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் தற்போது வெளிநாடு சென்று இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிடம் தகவல் கொடுத்து விட்டு தான் சென்றார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால் மீண்டும் சசிகலாவை அதிமுகவிற்கு தலைமை பொறுப்பை கொடுக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்க்காக சில அரசியல் காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் தினகரன் அமமுகவுக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பதால் அதிமுகவில் சசிகலா இணைவதற்கு இடையூறாக இருக்கும் என்று சசிகலா இருப்பதாக கூறுகின்றனர். இது மட்டுமில்லாமல் தினகரன் கட்சியிலிருந்து தினமும் நிர்வாகிகள் வெளியேறுவதால் இருப்பவர்களுக்கு பதவி கொடுத்து தக்க வைக்கலாம் என்று தினகரன் தரப்பு முடிவெடுத்துள்ளதாம்.