விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு உச்சபட்ச கடுமையான தண்டனை உடனே பெற்றுத்தர வேண்டும்.. சரத்குமார் வலியுறுத்தல்.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழங்கு குற்றவாளிகளுக்கு உச்சபட்ச கடுமையான தண்டனை உடனடியாக பெற்றுத்தர வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கயவர்களின் இழிச்செயல் தமிழக மக்களின் நெஞ்சங்களை பதறச் செய்துள்ளது.

இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட ஹரிஹரன், ஜூனைத் அகமது, மாடசாமி, பிரவீன், 18 வயதுக்குட்பட்ட 4 சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், குற்றம் புரிந்த அனைவரும் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட்டு, ஜாமீனில் கூட வெளிவர முடியாத அளவிற்கு சிறையில் வைக்கப்பட வேண்டும்.

சுயமரியாதையுடன் வாழும் பெண்களை மறைமுகமாக புகைப்படம், வீடியோ எடுத்து, மானம், மரியாதையை குலைத்துவிடுவேன் என மிரட்டி, வன்புணர்வு செய்ய நினைக்கும் வக்கிர எண்ணம், மன்னிக்கமுடியாத பேராபத்து கொண்டது. பெண்ணை அவமானப்படுத்தி, அடிமைப்படுத்தும் கொடுமையான செயலுக்கு வழங்கப்படும் தண்டனையானது, இன்னொருவர் அச்செயல் புரிவதற்கு துணியாத அளவிற்கு அமைவது அவசியம்.

சமூகத்தில் இதுபோன்று நடைபெறும் எண்ணற்ற அவலங்களால் அவமானம் ஏற்படுமோ என்ற பயத்தால் உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டு, பலர் வேதனையில் வாடுவதை அறிவேன். வெளியில் தெரியவரும் ஒன்றிரண்டு குற்றங்களுக்கு தண்டனைகள் கடுமையாக வழங்கப்பட்டால் தான், வெளிவராத சம்பவங்களும், குற்றங்களும் தடுக்கப்பட்டு, சமூக ஒழுக்கம் சீர்குலையாமல் பாதுகாக்கப்படும்.

முக்கியமாக, அரசியலமைப்புச் சட்டம் குற்றவாளிகளுக்கு வழங்கும் தண்டனைகளை விட, இதுபோன்ற இழிச்செயலில் ஈடுபடும் தன் குடும்பத்தைச் சார்ந்த நபர்களை அக்குடும்பம் ஒதுக்கி வைப்பதிலும், அவமானப்படுத்துவதிலும் தான் உண்மையான தண்டனை அடங்கியிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் எப்படி அவமானத்திற்கு பயந்து கற்பை இழந்திருக்கிறாளோ, அதுபோன்ற அவமானம் குற்றவாளிகளுக்கு ஏற்படும் போது, அதை காணும் பெற்றோர்கள் பிள்ளைகள் வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களின் சுய ஒழுக்கத்தை உறுதி செய்வார்கள்.

விருதுநகர் இளம்பெண் பாதிக்கப்பட்ட வழக்கில் நீதி கிடைக்க வேண்டுமெனில், சமூக ஒழுக்கம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில், எந்தவொரு குடும்பத்திலும் இனி இது நடக்கக்கூடாது எனில் அதிகாரிகள், காவல்துறையினர், நீதித்துறையினர் இச்சம்பவத்தில் அலட்சியம் காட்டாமல், காலம் கடத்தாமல் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச கடுமையான தண்டனையை உடனடியாக பெற்றுத்தர வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sarathkumar statement for virudhunagar gang rape


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->