'சங்கீதாவுக்கு நீதி வேண்டும்'...! - விஜய் விவகாரத்தில் அதிரடியாகக் கருத்துத் தெரிவித்த தமிழிசை!
Sangeetha wants justice Tamilisai makes sharp comment Vijay issue
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், திரையுலகின் முன்னணி நட்சத்திரமுமான விஜய்யிடமிருந்து சட்டப்பூர்வமாகப் பிரியக் கோரி, அவரது மனைவி சங்கீதா கடந்த மாதம் 27-ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த செய்தி, தமிழகத்தையே அதிர வைத்தது.
அந்த மனுவில் விஜய் மீது அவர் சுமத்திய அடுக்கடுக்கான புகார்கள் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பிய நிலையில், தற்போது சங்கீதா மற்றொரு அதிரடி மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

தனது புதிய மனுவில், விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், தனக்கு நீலாங்கரை இல்லத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதால் சென்னையில் தங்குவதற்கு இடமின்றித் தவிப்பதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
"விவாகரத்து நடைமுறைகள் முடியும் வரை அந்த இல்லத்தில் வசிக்க எனக்கு உரிமை உண்டு; அங்கு எனக்கும் சரிபாதி பங்கு உள்ளது. ஆனால், அங்கு நுழைய முயன்றால் வழக்கறிஞர்கள் மூலம் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன" எனப் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மேலும், திரையுலகில் கோடிக்கணக்கில் ஊதியம் ஈட்டும் விஜய், தனக்கும் பிள்ளைகளுக்கும் நியாயமான ஜீவனாம்சம் மற்றும் உரிய சொத்துரிமைகளை வழங்க வேண்டும் என்றும், சுமுகமாகப் பிரியத் தான் எடுத்த முயற்சிகளை விஜய் நிராகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "சங்கீதாவுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்; அவர் பெரும் மன உளைச்சலுக்கும் கொடுமைக்கும் ஆளாகியிருப்பது வேதனை அளிக்கிறது.
ஒரு பெண்ணாக அவர் படும் இன்னல்கள் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்" எனத் தனது ஆதரவுக்கரத்தை நீட்டியுள்ளார். அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் இந்த விவகாரம் இப்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Sangeetha wants justice Tamilisai makes sharp comment Vijay issue