#திடீர்திருப்பம் | ஆர்.எஸ்.எஸ் விவகாரத்தில் சிக்கலில் சிக்கிய தமிழக அரசு - சற்றுமுன் உயர்நீதிமன்ற நீதிபதி வெளியிட்ட அறிவிப்பு!
RSS Riot Issue Chennai HC TNgovt
வரும் அக்டோபர் 2 ஆம் தேதி சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற இருந்தது.
இந்த ஊர்வலத்திற்கு அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் தரப்பில் உள்துறை மற்றும் டி.ஜி.பி-யிடம் அளிக்கப்பட்ட மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து, ஆர்எஸ்எஸ் தொடர்ந்த வழக்கில், ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.,
இதற்கிடையே, ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கூறிய விண்ணப்பத்தை நிராகரித்த திருவள்ளூர் காவல்துறை, உள்துறை செயலாளர், தமிழக டிஜிபிக்கு ஆர்எஸ்எஸ் தரப்பு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததை எதிர்த்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய விண்ணப்பதாரர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும், இதுகுறித்த மனு எண்ணிடப்பட்டால் நாளை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும் நீதிபதி இளந்திரையன் அறிவித்துள்ளார்.
English Summary
RSS Riot Issue Chennai HC TNgovt