நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. இன்று மறுவாக்குபதிவு.. மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!!
repoll for 5 ward in tamilnadu
தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப் பதிவு முடிந்தது வாக்கு வாக்குகள் பதிவான இயந்திரங்கள் பெட்டிக்குள் வைத்து மூடி சீல் வைக்கப்பட்டது. அதன்பிறகு அவை போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. மின்னணு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் - 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு 21.02.2022 திங்கட்கிழமை அன்று நடைபெற உள்ளது.
மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள் :
1) சென்னை மாநகராட்சி :
வார்டு எண் 51. வாக்குச்சாவடி எண் - 1174 AV - வண்ணாரப்பேட்டை
வார்டு எண் 179, வாக்குச்சாவடி எண் - 5059 AV - ஓடைக்குப்பம், பெசண்ட் நகர்
2) மதுரை மாவட்டம் - திருமங்கலம் நகராட்சி :
வார்டு எண். 17, வாக்குச்சாவடி என 17W
3) அரியலூர் மாவட்டம் - ஜெயங்கொண்டம் நகராட்சி :
வார்டு எண். 16 வாக்குச்சாவடி என 15 M, 16 W
4) திருவணாமலை மாவட்டம் - திருவண்ணாமலை நகராட்சி வார்டு எண். 25 வாக்குச்சாவடி எண். 57 M, 57 W
மேலே குறிப்பிட்டுள்ள 5 வார்டுகளில், 7 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு இன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும். கடைசி ஒரு மணி நேரம், அதாவது மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை கோலிட் 19 அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியா மை பதிவு செய்யப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
English Summary
repoll for 5 ward in tamilnadu