திமுக அமைச்சர்கள் மாறி மாறி சிறைக்கு செல்கின்றனர் - பிரச்சாரத்தில் ராதிகா காட்டம்.!
rathika sarathkumar speech in election campaighn at aruppukkottai
பா.ஜ.க. சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நடிகை ராதிகா சரத்குமார் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற அவர் பேசியதாவது;-
![](https://img.seithipunal.com/media/RADHIKA SARATH-fq2rl.png)
"தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் போதைப்பொருள் புழக்கம், ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன. அமைச்சர்கள் மாறி மாறி சிறைக்கு செல்கின்றனர். தேசத்தை காப்பாற்றுவதற்காக அவர்கள் சிறைக்கு போகவில்லை, ஊழல் செய்ததால் போகிறார்கள்.
விருதுநகர் தொகுதியில் பல பிரச்சினைகள் இருப்பதாக மக்கள் என்னிடம் சொல்கிறார்கள். மக்களுக்கு என்னால் நல்லது செய்ய முடியும் என்று சொல்லக்கூடிய ஒரு இடத்தில் நான் இருக்கிறேன். மக்களுக்கு நல்லது செய்யும் ஒரு தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார்" என்று பேசியுள்ளார்.
English Summary
rathika sarathkumar speech in election campaighn at aruppukkottai