வழக்கு தொடுத்த காவல்துறை!! நீதிமன்றத்துக்கு சென்ற ரஞ்சித்!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை இயக்கிய ரஞ்சித் அரசியல் பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். 

இந்நிலையில், பா. ரஞ்சித் ராஜராஜசோழன் குறித்து பேசி பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளார். ராஜராஜசோழன் தங்கள் சமூகத்தின் நிலத்தை அபகரித்து விட்டதாக கூறினார். 

இந்த பேச்சுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் பலரும் ட்விட்டரில் ரஞ்சித்தை கலாய்த்து வருகின்றனர். #PrayForMentalRanjith என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதில் பலரும் பா.ரஞ்சித் குறித்த விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இது நேற்று இந்திய அளவில் டிரெண்டானது.

இவ்வாறு, ராஜராஜசோழன் பற்றி அவதூறாக பேசியதாக இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில், ராஜராஜ சோழன் குறித்து, தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் முன்ஜாமின் கோரி  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ranjith applied to bail


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->