தமிழக மக்களின் நலனில் அதிக அக்கறையுடன் இருப்பவர் இபிஎஸ்: பிரேமலதா பரப்புரை.!
Ramanathapuram Premalatha campaign
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியிருப்பதாவது, மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ராமநாதபுர பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஓடோடி வருவார்.
கச்சத்தீவை கொடுத்தவர்களும் ஆட்சியில் இருப்பவர்களும் கச்சத்தீவை மீட்க மாட்டார்கள். மீனவர்கள் பாதுகாப்பு மிகவும் அவசியம். அதனை உறுதிப்படுத்த இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.
![](https://img.seithipunal.com/media/admk irattai ilai 2023.png)
அ.தி.முக ஆட்சியில் தான் மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. உலக தமிழர்களுக்காக பாடுபட்டவர் கேப்டன் விஜயகாந்த்.
தமிழர்களுக்காக டெல்லியில் போராட்டம் நடத்தினார். தமிழக மக்களின் நலனில் அதிக அக்கறையுடன் செயல்பட்டவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. அவர்கள் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பாடுபட்டு வருகிறார் என தெரிவித்துள்ளார்.
English Summary
Ramanathapuram Premalatha campaign