#Breaking : ரஜினியின் இறுதி முடிவு என்ன?! கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கிய நிர்வாகிகள் வெளியிட்ட பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


இன்று காலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்தார். மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் ரஜினி சார்பில் அறிக்கை வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில் ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் மாவட்ட நிர்வாகிகள் பலரும் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக வர வேண்டும். அப்போதுதான் மக்களிடம் ஆதரவு கிடைக்கும் என்றும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கருத்துக்களையெல்லாம் கேட்ட பின்பு நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட நிர்வாகிகள் இடையே சில கருத்துக்களை தெரிவித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நடத்திய ஆலோசனை கூட்டம் பகல் 12.20 க்கு நிறைவு பெற்றது. ராகவேந்திரா மண்டபம் வெளியே கூடியிருந்த ரசிகர்களுக்கு, ரஜினிகாந்த் கையசைத்து உற்சாக படுத்தினார். பின்னர் வீடு திரும்பினார். செய்தியாளர் சந்திப்பு ஏதும் நடத்தவில்லை.

சற்றுமுன் வெளியான தகவலின் படி, மாவட்ட செயலாளர்களை செயலாளர்களை நடிகர் ரஜினி தனித்தனியாகவும் அழைத்து பேசியுள்ளார். அப்போது மாவட்ட செயலாளர்கள் ரஜினி அரசியல் கட்சி துவங்கி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வலியுறுத்தியதாக கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட ரஜினி மன்ற நிர்வாகிகள் பலரும், இன்று மாலை ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rajini political announcement today evening


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->