மழையை சிரமமாக பார்க்ககூடது!...அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


மழை பெய்து ஏரிகள் நிரம்பினால் தான் குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்று,  அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்த நிலையில் தமிழகத்தை நெருங்கி உள்ளது. குறிப்பாக இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகம் - தெற்கு ஆந்திராவை ஒட்டிய பகுதியில் தற்போது நிலை கொண்டுள்ளதாகவும், இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, நேற்று இரவு முதல் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேரு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், என்னை பொறுத்தவரை மழை கொஞ்சம் பெய்ய வேண்டும் என்றும், மழை பெய்து ஏரிகள் நிரம்பினால் தான் குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்று தெரிவித்தார். மேலும், இரண்டு நாள் சிரமத்தை பார்க்காதீர்கள் என்று கூறிய அவர், தமிழகம் முழுவதும் மழை பெய்தால் தான் மக்களுக்கு நல்லது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rain should not be seen as difficult minister kn nehru sensational interview


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->