பா.ஜ.க சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல் ஆவேச பேச்சு.! - Seithipunal
Seithipunal


நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தாக்குவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தெரிவித்துள்ளார்.

 29 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நாளை மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் தொண்டர்களை வாழ்த்தி ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர், காங்கிரஸின் முதுகெலும்பு கட்சியின் தொண்டர்களாகிய நீங்கள் தான். பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் நாட்டின் கருத்துக்கு எதிராக உள்ளது. 

அரசியலமைப்பு, ஜனநாயக கட்டமைப்பு, தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். நீங்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் காங்கிரஸ் சித்தாந்தங்களுக்கு எதிராக தெருக்களிலும் கிராமங்களிலும் ஒவ்வொரு நாட்டின் மூளையிலும் போராடி போராடுகிறீர்கள். 

தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் பொதுமக்களின் பிரச்சனைகளை கொண்டு வர எங்களுக்கு உதவியாக இருந்தீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். பா.ஜ.கவின் சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம் என பேசி உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi speech


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->