கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,க்கு பயம் வரும்: ராகுல்காந்தி..! - Seithipunal
Seithipunal


நாட்டில் தற்போது சித்தாந்தப் போர் நடந்து வருகிறது எனவும், ஒரு பக்கம் காங்கிரசும், அரசியல் அமைப்பும் உள்ளன. மறுபுறம், பா.ஜ.,வும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் உள்ளன என்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார். அத்துடன்,  கொஞ்சம் அழுத்தம் கொடுத்தாலும் பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,க்கு பயம் வரும் என ம.பி., மாநிலம் போபாலில் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

அத்துடன், அவர்கள் அரசியலமைப்பை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதோடு, படிப்படியாக இந்தியாவின் அனைத்து அமைப்புகளையும் அவர்கள் கைப்பற்றி நாட்டுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டாவது போர் சமூக நீதிக்கானது என்றும், ஜாதிவாரி கணக்கெடுப்பை நிறைவேற்ற தான் பாடுபடுவேன் என்று லோக்சபாவில் நாட்டிற்கு உறுதி அளித்தேன். பா.ஜ., மற்றும் ஆர்எஸ்எஸ் பற்றி எனக்கு நன்றாக தெரியும். நீங்கள் அவர்கள் மீது கொஞ்சம் அழுத்தம் கொடுத்தால் அவர்கள் பயப்படுவார்கள் என்று தொண்டர்களிடம் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை மீறி 1971-இல் பாகிஸ்தானை இந்தியா உடைத்தது என்றும்,  வல்லரசுகளுக்கு எதிராக காங்கிரஸ் போராடுகிராதாகவும், அவர்களுக்கு காங்கிரஸ்  தலைவணங்குவது கிடையாது என்றும் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi says if we put a little pressure on BJP and RSS they will be scared


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->