அதிமுக கலகத்திற்கு அந்த 3 பேர் தான் காரணம்.! செய்தியாளர்களிடம் உடைத்த முக்கிய புள்ளி.!  - Seithipunal
Seithipunal


இன்று செய்தியாளர்களை சந்தித்த, ஓ.பி.எஸ் ஆதரவாளரான புகழேந்தி, " அதிமுகவின் மகிழ்ச்சிக்கு இடையூறாக சிவி சண்முகம், கே.பி.முனுசாமி மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் இருக்கின்றனர். அவர்கள் கட்சியில் இருக்கின்ற வரை இணைப்பிற்கு சாத்தியமே இல்லை.

அந்த நிலைப்பாட்டை தான் இபிஎஸ் எப்போதும் தொடர்ந்து வருகிறார். ஆகவே, ஓபிஎஸ் எப்போதும் ஒற்றுமையாக இருக்க தான் விரும்புவார். அது மக்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும். எனவே, கே.பி.முனுசாமி தன்னுடைய சொந்த மாவட்டத்திலேயே செல்வாக்கை இழந்து கொண்டு இருக்கின்றார் 

நம்ப மறுத்தாலும் இது தான் நிதர்சனமான உண்மை. இந்தி மொழி திணிப்பு பிரச்சனைகளில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், எம்ஜிஆர் ஜெயலலிதா உள்ளிட்டோர் என்ன மொழி கொள்கை நிலைப்பாடு கொண்டு இருந்தார்களோ அது தான் ஓபிஎஸ்-இன் நிலைப்பாடு.

எனவே, மூன்றாவது மொழியை என்றைக்கும், அதை தமிழகத்தில் திணிக்கும் முயற்சி பலிக்காது" என்று கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pukalenthi blams 3 MLA of admk


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->