டாஸ்மாக்கில் 1 லட்சம் கோடி ஊழல்! இமாலய ஊழலை மறைக்க திமுக முனைவது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது - கிருஷ்ணசாமி! - Seithipunal
Seithipunal


தமிழக டாஸ்மாக் ஊழல் - அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை வைத்திருப்பது இந்தியாவில் ஊழலை ஊக்குவிக்கவே உதவும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் ஊழல் குறித்து நடைபெற்று வரும் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. டாஸ்மாக்கின் இமாலய ஊழலை மறைக்க திமுக முனைவது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லறை விற்பனையில் பாட்டிலுக்கு ரூ 10 முதல் 50 வரை கூடுதலாக வாங்குவது முதல் டாஸ்மாக் பார்கள் ஏலம் விடுவது, காலி பாட்டில் விற்பனை, டாஸ்மாக் பாட்டில்களை எடுத்துச் செல்லும் வாடகை வாகனங்கள் அமர்த்துவது, எலைட் கடைகளுக்கு கட்டிடங்கள் வாடகைக்குப் பிடிப்பது மற்றும் கலால் வரியின்றி மதுபான ஆலைகளிலிருந்து சட்ட விரோத பார்களுக்கு மதுபானங்களை புற வழியாக எடுத்துச் செல்வது என பல வகைகளிலும் ஆண்டொன்று லட்சம் கோடி ஊழல் நடைபெறுகிறது.

எனினும் முன்பே பதிவான எஃப்.ஐ.ஆர்களின் அடிப்படையில் 1000 கோடி ஊழல் குறித்து அமலாக்கத்துறை இப்பொழுது விசாரணை நடைபெறுகிறது. டாஸ்மாக்கில் நடைபெறும் ஊழலில் கீழ்மட்ட ஊழியர் முதல் முக்கிய அதிகாரிகள், முதல் குடும்பம், அமைச்சர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

எனவே அதன் முழு தன்மையும் விசாரிக்க வேண்டும் எனில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு செல்லாமல், அந்த ஆவணங்களை ஆய்வு செய்யாமல், அங்கு பணிபுரியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விசாரிக்காமல் ஊழலின் எப்படி உண்மைத் தன்மையை கண்டுபிடிக்க முடியும்? 

ஒரு கொலை அல்லது களவு சம்பந்தப்பட்ட வழக்கில் கூட நேரடியாகச் சாட்சிகளும் ஆதாரங்களும் இல்லையெனில் அக்கம் பக்கத்தினர் அனைவரிடமும் தானே காவல்துறை விசாரணை மேற்கொள்கிறது. டாஸ்மாக்கில் மாபெரும் ஊழல் நடைபெற்று உள்ளது என நாம் உட்பட பலரும் தொடர்ந்து ஆளுநரிடம் புகார் அளித்திருக்கிறார்கள். ஏற்கனவே பதியப்பட்ட எஃப்ஐஆர் மற்றும் பல புகார்களின் அடிப்படையில் தற்போது தான் அமலாக்கத்துறை தனது விசாரணையைத் துவக்கி, முக்கிய குற்றவாளிகளை நெருங்கும்போது திடீரென நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

எந்த விசாரணைத் துறை அதிகாரிகளும் வெறுமனே எல்லோரையும் விசாரித்து நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்; மிகக்குறைந்த எண்ணிக்கையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் பல தடைகளையும் தாண்டி ஊழல் பெருச்சாளிகளையும், டாஸ்மாக் ஊழல் மூலம் சம்பாதித்த பணத்தை திரைத்துறை துறையில் மற்றும் பல்வேறு துறைகளில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு முக்கிய பிரமுகர்களையும் நெருங்கும் போது தமிழ்நாட்டின் நடைபெறும் ஊழல் சாம்ராஜ்யத்தின் உண்மைத் தன்மையை உணராமல், தமிழக மக்களின் வரிப்பணத்தை பல கோடிகள் செலவழித்து அமர்த்தப்பட்ட சீனியர் வழக்கறிஞர்களின் முகத்திற்காக இடைக்கால தடை வழங்கப்பட்டுள்ளது. இது ஊழலை ஒழிக்க உதவாது; இந்தியாவில் ஊழலை ஊக்குவிக்கவே உதவும். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டுபல மாதங்கள் சிறையிலிருந்துள்ளனர். அவர்களுக்கு ஒரு அளவுகோல்; தமிழக மதுபான ஊழல்வாதிகளுக்கு ஒரு அளவுகோலா.?

திமுக தமிழக மக்களின் வரிப்பணத்தை தனியார் வக்கீல்களுக்கு கோடி கோடியாய் கொட்டி கொடுத்து கூட்டாட்சி தத்துவம் எனும் பெயரில் தங்கள் தவறுகளை மறைத்து திமுக  கொள்ளையடிக்க முயல்கிறது. உச்ச நீதிமன்றம் திமுகவின் பித்தலாட்ட அரசியலுக்கு ஆட்பட்டுவிட்டால் தமிழ்நாடு ஊழல் காடாகிவிடும். எனவே அமலாக்கத்துறை நன்கு திறமை வாய்ந்த வழக்கறிஞர்களை அமர்த்தி, வலுவான வாதங்களை முன்வைத்து இடைக்காலத் தடையை நீக்கி விசாரணையை மீண்டும் துவக்க வேண்டும்" என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PT Krishnasamy DMK TASMAC Scam MK Stalin


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->