கரூரில் ரோடு ஷோ நடத்தும் பிரியங்கா காந்தி: எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி தொடங்கி ஜூன் நான்காம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி வருகின்ற 12ஆம் தேதி திருநெல்வேலி மற்றும் கோவையில் பிரசாரம் செய்ய உள்ளார். 

இதனை தொடர்ந்து வருகின்ற 15ஆம் தேதி பிரியங்கா காந்தி தமிழகத்திற்கு வருகிறார். சேலம் பகுதியில் அவரது பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

ஆனால் கரூர் ஜோதிமணிக்கு ஆதரவு திரட்ட விரும்பியதால் கரூரில் பிரசார ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரியங்கா காந்தி வருகின்ற 15-ம் தேதி விமான மூலம் திருச்சி வந்து பின்னர் ஹெலிகாப்டரில் கரூர் செல்ல உள்ளார். 

கரூரில் அவர் ரோட் ஷோ மேற்கொண்டு வாக்குகளை சேகரிக்க உள்ளார். கரூர் பிரசாரத்தை முடித்துவிட்டு திருச்சி திரும்பும் பிரியங்கா அங்கிருந்து வேறொரு மாநிலத்திற்கு பிரசாரத்திற்கு செல்வதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்திள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priyanka Gandhi election campaign


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->