திமுக அமைச்சர் மீதான ஊழல் வழக்கு! சிறப்பு நீதிமன்றத்தில் நாளை விசாரணை! - Seithipunal
Seithipunal


கடந்த 2008ம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த பெரியசாமி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை வீடு கட்ட மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக பணியாற்றிய கணேசன் என்பவருக்கு குடியிருப்பு ஒதுக்கியதில் முறைகேடு நடந்தக புகார் எழுந்தது. அந்த புகார் தொடர்பாக  அமைச்சர் பெரியசாமி மற்றும் அரசு அதிகாரிகள் மீது கடந்த 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நீண்ட வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் அமைச்சர் பெரியசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குடியிருப்பு ஒதுக்கியதில் அமைச்சர் பெரியசாமி உடந்தையாக இருந்தார் என்பதற்கான எந்த ஒரு ஆதாரங்கள் இல்லை எனவும், அமைச்சர் மீது வழக்கு தொடர்வதற்கு முறையான அனுமதி பெறவில்லை எனவும், புகாருக்கும் அமைச்சர் பெரியசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டார்.

மேலும் அரசியல் உள்நோக்கத்தோடுஇந்த வழக்கு தொடரப்பட்டதால் அவரை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அனைத்து தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி அமைச்சர் பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டார்.

இந்த வழக்கை எம்பிக்கள் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பு, அரசு தரப்பு மற்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பு விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நாளை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாளை திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான ஊழல் வழக்கில் மறு விசாரணை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Periyasamy corruption case heard in chennai special court tomorrow


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->