அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் தொகுதி மக்கள்.!  - Seithipunal
Seithipunal


குன்னம் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவும், போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கருக்கு எதிராக தொகுதி மக்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூரில் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், லெப்பை குடிகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீரே இல்லை. இது வறண்ட பூமியாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக, அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும் என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். 

அந்த போஸ்டரில் வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தை நீர் ஆதாரம் உள்ள வேறு பகுதிக்கு மாற்றுகிறோம் என்று கூறி வாக்குகளை பெற்று அமைச்சராக பதவி ஏற்றார். அதன் பின் லெப்பை குடிக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் இன்னமும் தண்ணீர் இல்லை வறண்டு போன பூமியாக தான் இருக்கின்றது. 

இதற்க்காக பாடுபடும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் அவர்களுக்கு எதிராக பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டி கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்த பொதுமக்கள் அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்."என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Perambalur peoples protest against SS Sivasangar


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->