மக்களுக்கு பதிலளிக்க முடியாமல்..துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஓட்டம்.!!
people question no answer pichandi
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக நடைபெற இருக்கிறது. இதனால், அனைத்து கட்சி அரசியல் வேட்பாளர்களும் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அண்ணாதுரை அறிவிக்கப்பட்டார்.
அண்ணாதுரை தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அண்ணாதுரை ஆதரித்து இண்டியா கூட்டணி பேச்சாளர்களும் இண்டியா கூட்டணி தலைவர்களும் பிரச்சாரம் செய்துகொண்டு வருகின்றனர்.
அண்ணாதுரையை ஆதரித்து வாக்குசேகரிக்க வந்த கிழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் துணை சபாநாயகருமான கு.பிச்சாண்டி வந்த காரை வழிமறைத்த பொதுமக்கள் கேள்வியால் பிச்சாண்டியை திணறடிக்க செய்தனர்.
" தேர்தலுக்கு தேர்தல் மட்டும்தான் வருவீங்களா. 3 ஆண்டுகளாக எங்கே போனீங்க " என்று பொதுமக்கள் கேள்வி கேட்டனர். ஒருகட்டத்தில் கோவமடைந்த கு.பிச்சாண்டி வந்த காரிலே திரும்பி சென்றார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
people question no answer pichandi