ஆர்.பி உதயகுமாரை ரவுண்டு கட்டிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்! பசும்பொன்னில் பதற்றம்! - Seithipunal
Seithipunal


முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அதிமுகவால் வழங்கப்பட்ட தங்க கவசம் குறித்தான பிரச்சனை நீதிமன்றம் வரை சென்று மதுரை மாவட்ட டிஆர்ஓ-விடம் தங்க கவசம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் தங்கக் கவசம் பெரும் வாய்ப்பை இழந்தனர்.

இந்த நிலையில் நேற்று தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று பசும்பொன் சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தங்க கவசம் அணிய எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என்று பேசியதாக கூறப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்.பி உதயகுமாரை சூழ்ந்து மிரட்டும் வகையில் பேசியுள்ளனர் . பசும்பொன் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு அங்கு கூடியிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS supporters threatening RB Udayakumar


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->