கச்சத்தீவை பிரதமர் மோடி மீட்பார்.. ஓபிஎஸ் நம்பிக்கை.!!
OPS say Katchatheevu will get back by Narendra Modi
தமிழக அரசியலில் கடந்த இரண்டு நாட்களாக கச்சத்தீவு விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கட்சத்தீவு தாரை பார்க்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டன என பதிவிட்டிருந்தார் .
அதற்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த 10 ஆண்டுகளாக கும்பகர்ண தூக்கத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடி கச்சத்தீவை மீட்காமல் தேர்தல் அரசியல் காக தற்போது பேசி வருவதாக பதிலடி கொடுத்தார்.
இதற்கிடையே தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடி கட்சியை தீவை மீட்கும் பணியில் இறங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசி அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு உறுதுணையாக இருந்து கச்சத்தீவை மீட்க நான் பாடுபடுவேன். கச்சத்தீவை மீட்கும் பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். உறுதியாக பிரதமர் நரேந்திர மோடி கச்சத்தீவை மீட்பார்" என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
English Summary
OPS say Katchatheevu will get back by Narendra Modi