#BigBreaking || அடுத்த அதிரடி... டெல்லியில் முக்கிய புள்ளியை சந்திக்கும் ஓபிஎஸ்.!  - Seithipunal
Seithipunal


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று டெல்லியில் உள்ள இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்துள்ளார்.

அவரின் அந்த மனுவில் பொதுக்குழுவில் அதிமுக சட்ட விதிகளில் மாற்றம் செய்து, பொதுச் செயலாளர் பதவியை உருவாக்க தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பு வருகின்ற 11ஆம் தேதி நடத்த உள்ள பொது குழுவுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் பன்னீர்செல்வம் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நேரம் கேட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமரை நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கிடைத்தால், பிரதமர் மோடி உடனான அந்த சந்திப்பில் காவேரி விவகாரம் உள்ளிட்ட தமிழக பிரச்சனைகள் குறித்து ஓபிஎஸ் கோரிக்கை வைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை கேட்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பிரதமர் மோடி சொன்னதால்தான் தான் துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டதாக ஓபிஎஸ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ops in delhi may meet pm


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->