#BREAKING:: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ஜிதேந்திர அவாத் ராஜினாமா..!!
NCP General Secretary Jayant Patil resigned
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஜிதேந்திர அவாத் ராஜினாமா..!!
மகராஷ்டிரா மாநிலத்தின் பலம் வாய்ந்த கட்சியில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிராவில் அடுத்த முதலமைச்சர் ஆகும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு அஜித் பவார் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இருப்பினும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவார் மற்றும் அஜித் பவார் இடையே மோதல் போக்கு இருந்து வருவதை அம்மாநில அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 53 எம்எல்ஏக்களில் 40 பேர் அஜித் பவாரின் பக்கம் உள்ளதாகவும், இதனால் சரத் பவாருக்கு எதிரான நிலைப்பாட்டில் கட்சி திரும்பி உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என சரத் பவார் அறிவித்திருந்தது தேசிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதனால் மகாராஷ்டிராவில் கூடிய விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ஜிதேந்திர அவாத் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை சரத் பவாருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து இரு பெரும் தலைவர்கள் தேசியவாத காங்கிரஸிலிருந்து வெளியேறி இருப்பது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில் இந்த விவகாரம் தேசிய அரசியலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
NCP General Secretary Jayant Patil resigned