#Breaking || பிப்.18ல் மீண்டும் தமிழகம் வருகிறார் நரேந்திர மோடி.!! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு வரும் பிப்ரவரி 18ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் நடைபயணம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அதன் நிறைவு நிகழ்ச்சியானது வரும் பிப்ரவரி 18ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ள நிலையில் அந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளதாகவும், அதற்காக அவர் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழாவில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பாஜக மூன்றாவது அணி அமைக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் இந்த சூழலில் பிரதமர் மோடி வருகை அரசியல் வட்டாரத்தில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narendra Modi visit to tamilnadu on feb18


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->