அவர்கள் ராமதாசை சந்தித்தமைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி..!
Nainar Nagendran interview: BJP has nothing to do with their meeting with Ramadoss
சைதை துரைசாமி, குருமூர்த்தி ஆகியோர் ராமதாசை தனிப்பட்ட முறையில் சந்தித்தமைக்கும், பா.ஜ.,வுக்கும் எந்த தொடர்பு இல்லை என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மதுரையில் கால் பதிக்க வேண்டும் என்பதற்காகவே வரும் ஜூன் 08-ஆம் தேதி அமித்ஷா வரவுள்ளார். மேலும், முருக பக்தர் மாநாட்டில் ஒலிக்கும் குரல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும் எனவும், அனைவரும் ஓரணியில் இணைந்து தி.மு.க., அரசைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே நிலைப்பாடு என்று அறிவித்துள்ளார்.

இதற்கு த.வெ.க., தலைவர் விஜய்க்கும் இதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் ராமதாசை தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளார். அதற்கும் பா.ஜ.,வுக்கும் தொடர்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பெங்களூரில் நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், கர்நாடக மாநிலத்தின் ஆளும் கட்சியினர் சரியான ஏற்பாடு செய்யாததே காரணம். இது போன்ற நிகழ்வுகளை பாதுகாப்போடு நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மஹாராஷ்ராவில் அதைவிட அதிகமாக கூட்டம் கூடிய போதும் கூட சிறு பிரச்சனை ஏற்படவில்லை என்றும், தேனி விவசாயி தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணையும் நடத்தி, உரிய இழப்பீடும் வழங்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
English Summary
Nainar Nagendran interview: BJP has nothing to do with their meeting with Ramadoss